பதிவு செய்த நாள்
16 செப்2014
23:45
புதுடில்லி:இந்திய விமான சேவை நிறுவனங்கள், அதிரடி கட்டண குறைப்பு சலுகைகளை அறிவித்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த ஜூலை மாதத்தில், 52.60 லட்சமாக இருந்த விமான பயணிகள் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில், 56.97 லட்சத்தை எட்டியுள்ளது.நடப்பாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில், விமானங்களில் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 433.25 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 411.40 லட்சமாக இருந்தது.ஆக, கணக்கீட்டு காலத்தில், விமான பயணிகள் எண்ணிக்கை, 5.31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதேசமயம், அநேக விமான சேவை நிறுவனங்களில், பயணத்தின் போது, சராசரியாக, 70–80 சதவீத இருக்கைகளே நிரம்பியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம், 32.6 சதவீத சந்தை பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, ஜெட்ஏர்வேஸ் – ஜெட்லைட் (20.1 சதவீதம்), ஏர் – இந்தியா (16.2 சதவீதம்), கோஏர் (10), ஏர் கோஸ்டா (1.1) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.விமான சேவையில் புதிதாக களமிறங்கியுள்ள ஏர் ஏசியா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 0.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|