பதிவு செய்த நாள்
17 செப்2014
17:36
மும்பை : கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குசந்தைகள் நேற்று கடுமையாக சரிந்த நிலையில் இன்று(செப்., 17ம் தேதி) மீண்டன. சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், சீனா புதிதாக கடன் வழங்க உள்ளதாக அறிவித்து இருப்பதாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர துவக்கத்தில், சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய நிலையில், தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குசந்தைகள் வர்த்தகநேர முடிவில் 138.78 புள்ளிகள் உயர்ந்து 26,631.29-ஆகவும், நிப்டி 42.60 புள்ளிகள் உயர்ந்து 7,975.50-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 20 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 10 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக இன்போசிஸ் 2.29 சதவீதமும், டிசிஎஸ்., 1.31 சதவீதமும், விப்ரோ 1.41 சதவீதமும் ஏற்றம் கண்டன. இவைகள் தவிர்த்து டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பெல், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி., ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|