பதிவு செய்த நாள்
19 செப்2014
23:57
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.ஸ்காட்லாந்துஇந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, ‘சென்செக்ஸ் 0.08 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தது.
அதேசமயம், ‘நிப்டி 0.08 சதவீதம் ஏற்றம் கண்டது.ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து தனித்து செயல்படுவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதில், 55 சதவீதம் பேர் பிரிட்டனிலிருந்து பிரிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதன் எதிரொலியாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 1.39 சதவீதம் ஏற்றம் கண்டது.மாருதி:அதேசமயம், பொறியியல், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 21.97 புள்ளிகள் சரிவடைந்து, 27,090.42 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,எல் அண்டு டி,ஓ.என்.ஜி.சி., இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட,13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும்,டி.சி.எஸ்., மாருதி,சிப்லா உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி, 6.70 புள்ளிகள் உயர்ந்து, 8,121.45 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|