பதிவு செய்த நாள்
19 செப்2014
23:59
ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நடந்த கொப்பரை ஏலத்தில், 825 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தில் காங்கேயம், பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், தென்னை மரங்கள் அதிகம்.மூன்று ஆண்டு:இருப்பினும், கடந்த, மூன்று ஆண்டாக அனைத்து பகுதிகளிலும், கடும் வறட்சி நிலவியதால், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைந்து, அவல்பூந்துறை கொப்பரை ஏலச்சந்தைக்கு, 4,000 முதல், 5,000 மூட்டை தேங்காய் கொப்பரை ஏலத்துக்கு வந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக, 1,000 மூட்டைகளை தாண்டுவதில்லை.
கடந்த வாரம் சந்தைக்கு, 950 மூட்டை கொப்பரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த வாரம், 825 மூட்டை மட்டுமே வரத்தானது.இதுபற்றி, அவல்பூந்துறை ஏலச்சந்தை, கண்காணிப்பாளர் அர்ஜுனன் கூறியதாவது:ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், காங்கேயம், வெள்ளகோவில், எழுமாத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கொப்பரை ஏலம் நடக்கிறது.
முதல் ரகம்:இருப்பினும், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் நல்ல விலை கிடைப்பதால், ஈரோடு மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை என, பல மாவட்ட விவசாயிகள், இங்கு விற்பனைக்காக கொப்பரை மூட்டைகளை எடுத்து வருகின்றனர்.முதல் ரக கொப்பரை அதிகபட்சமாக, 102 முதல், 107 ரூபாய்க்கும், இரண்டாவது ரகம், 97 முதல், 100 ரூபாய்க்கும் விற்பனையானது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|