பதிவு செய்த நாள்
21 செப்2014
02:02
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 9,660 கோடி ரூபாய் (161 கோடி டாலர்) சரிவடைந்து, 18.94 லட்சம் கோடி ரூபாயாக (31,570 கோடி டாலர்) குறைந்துள்ளது.
இது, கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும், 7,980 கோடி ரூபாய் (133 கோடி டாலர்) வீழ்ச்சி கண்டு, 19.04 லட்சம் கோடி ரூபாயாக (31,731 கோடி டாலர்) சரிவடைந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னிய செலாவணியில் அதிக பங்களிப்பை கொண்டுள்ள, அன்னிய செலாவணி சொத்து மதிப்பு, கணக்கீட்டு வாரத்தில், 160 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 28,876 கோடி டாலராக குறைந்துள்ளது.
அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,093 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1.14 கோடி டாலர் சரிவடைந்து, 433 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 44 லட்சம் டாலர் குறைந்து, 166 கோடி டாலராகவும் வீழ்ச்சி கண்டுள்ளன என, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|