பதிவு செய்த நாள்
22 செப்2014
00:00
புனே:நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், உள்நாட்டு டயர் தயாரிப்பு துறை, 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 49,300 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
மேலும், இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஒட்டு மொத்த அளவில், 11 – 12 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, வரும் 2016 – 17ம் ஆண்டிற்குள், 62,300 கோடி ரூபாயை எட்டும் என, தரக்குறியீட்டு நிறுவனம் இக்ரா தெரிவித்துள்ளது.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், வர்த்தக மற்றும் பயணிகள் கார் விற்பனை சுணக்கம் கண்டதையடுத்து, டயர்களுக்கான தேவை மிகவும் குறைந்து போனது. எனினும், இருசக்கர மற்றும் டிராக்டர் பிரிவில், பயன்பாடு ஓரளவிற்கு உயர்ந்ததையடுத்து,
கடந்த நிதியாண்டில், டயர்களுக்கான தேவை, ஒரு சதவீதம் வளர்ச்சி கண்டது. இந்நிலையில், நடப்பாண்டில், வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளதால், டயர் தேவை, 6 – 8 சதவீதம் என்ற அளவில் விறுவிறுப்பட்டையும் என, ‘இக்ரா’ மதிப்பீடு செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ், பிரேசில், ஐக்கிய அரபு நாடுகள் இறக்குமதியை குறைத்துக் கொண்டதையடுத்து, சென்ற நிதியாண்டில் டயர் ஏற்றுமதி, 7.5 சதவீதம் அளவிற்கே உயர்ந்தது. இந்நிலையில், இதன் ஏற்றுமதி சூடுபிடிக்க, இன்னும், 18 – 24 மாதங்கள் பிடிக்கும் என, இக்ரா மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|