பதிவு செய்த நாள்
22 செப்2014
00:02
புதுடில்லி:நாட்டின் முந்திரி ஏற்றுமதி, நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,ஆக.,), 2,031 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 4 சதவீதம் குறைவாகும்.இதே போன்று, அளவின் அடிப்படையிலும், இதன் ஏற்றுமதி, 12 சதவீதம் சரிவடைந்து, 46,240 டன்னாக குறைந்துள்ளது.
முந்திரி ஏற்றுமதியில், நமக்கு போட்டி நாடாக விளங்கும், வியட்நாமில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அந்நாடு குறைவான விலையில், முந்திரியை ஏற்றுமதி செய்துவருகிறது.
இதன் காரணமாகவே, சர்வதேச சந்தையில், இந்திய முந்திரிக்கான தேவை சுணக்கம் கண்டுள்ளது.அதேசமயம், பண்டிகை காலத்தை ஒட்டி, இந்தியாவின் கச்சா முந்திரி இறக்குமதி, 19 சதவீதம் உயர்ந்து, 5.79 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. ஆப்ரிக்கா, மற்றும் இதர ஆசிய நாடுகளில் இருந்து, இந்தியா, கச்சா முந்திரியை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|