பதிவு செய்த நாள்
22 செப்2014
00:04
புதுடில்லி:மத்திய அரசின் தற்போதைய புள்ளி விவரத்தில், நடப்பு 2014 – 15ம் கரீப் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி, 8.80 கோடி டன்னாக சரிவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டின் இதே பருவத்தில், இதன் உற்பத்தி, 9.17 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.இதே போன்று, முக்கிய உணவு தானியங்கள் உற்பத்தி, 3.15 கோடி டன்னிலிருந்து, 2.70 கோடி டன்னாகவும், பருப்பு வகைகள் உற்பத்தி, 60 லட்சம் டன்னிலிருந்து, 52 லட்சம் டன்னாகவும் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளன.
காலம் தவறிய பருவமழை மற்றும் தாமதமான விதைப்பு பணிகள் உள்ளிட்டவை, தானியங்கள் உற்பத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படும் என, வேளாண் செயலர் ஆஷிஸ் பகுணா தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் ராபி பருவத்தில் (அக்., – மார்ச்), 9.40 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.சென்ற ஆண்டின் இதே பருவத்தில், 9.25 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அதன் உற்பத்தி சாதனை அளவாக, 9.59 கோடி டன்னாக எகிறியது என்பது, குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|