பதிவு செய்த நாள்
22 செப்2014
00:05
புதுடில்லி:வரும், 2018 – 19ம் நிதியாண்டிற்குள், இந்தியாவின் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி, 90 ஆயிரம் கோடி ரூபாயை (1,500 கோடி டாலர்) எட்டும் என, பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
சென்ற 2012–13ம் நிதியாண்டில், பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி, 790 கோடி டாலராக இருந்தது. இது, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.குறிப்பாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில், இந்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவை சூடுபிடித்துள்ளது.
இதை சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி, இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.இதன் காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி, 1,500 கோடி டாலரை எட்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|