பதிவு செய்த நாள்
22 செப்2014
17:24
மும்பை : ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. ஆனபோதும் முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகம் இறுதியில் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 116.32 புள்ளிகள் உயர்ந்து 27,206.74-ஆக முடிந்தது. முன்னதாக சென்செக்ஸ் 170 புள்ளிகள் வரை சரிந்து 27 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. தேசிய பங்குசந்தையான நிப்டி 24.85 புள்ளிகள் உயர்ந்து 8,145.30-ஆக முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி., நிறுவன பங்குகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. இவைகள் தவிர்த்து இந்துஸ்தான், எஸ்பிஐ., ஆக்சிஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐசிஐசிஐ., பஜாஜ் ஆட்டோ, கெயில், எச்டிஎப்சி., டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டு இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|