பதிவு செய்த நாள்
23 செப்2014
00:52
புதுடில்லி,: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது, நடப்பு நிதியாண்டிற்கான நிதி பற்றாக்குறை இலக்கை எட்ட உதவிகரமாக அமையும் என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்தியா, அதன் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. சென்ற நிதியாண்டில், மொத்த இறக்குமதி, 16,800 கோடி டாலரை எட்டியிருந்தது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது நல்ல செய்தி. அது, நாட்டின் நிதி பற்றாக்குறையை இலக்கின் அளவிற்குள் கட்டுக்குள் வைக்க உதவியாக அமையும் என, நிதியமைச்சக உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை இலக்கை, 4.1 சதவீதம் என்ற அளவில் வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|