பதிவு செய்த நாள்
23 செப்2014
00:53
கோவை,:‘உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நுாலிழை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, விரைவில் மாறும்’ என, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.ஐ.,) தலைவர் பிரேம் மாலிக், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:தற்போது சீனாவில், இந்திய நுாலிழைக்கான தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது.அதனால், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், கடந்த சில மாதங்களாக, நுாலிழை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, வரும் வாரங்களில் மாறுவற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், ஜவுளிக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து, ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்க துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பண்டிகை காலத்தை முன்னிட்டு, உள்நாட்டிலும் ஜவுளிக்கான தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது.இது போன்றவற்றால், நுாலிழை வர்த்தகத்தில் காணப்பட்ட சுணக்க நிலை, தற்போது மாறுவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|