‘நுாலிழை வர்த்தக சுணக்கம் விரைவில் மாறும்’‘நுாலிழை வர்த்தக சுணக்கம் விரைவில் மாறும்’ ... இந்திய மோட்டார் வாகன துறை வருவாய் ரூ.18 லட்சம் கோடியை எட்டும் இந்திய மோட்டார் வாகன துறை வருவாய் ரூ.18 லட்சம் கோடியை எட்டும் ...
ஆயுத பூஜை கொண்டாட்டம்: பொரி தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2014
00:55

ஈரோடு :ஆயுத பூஜை நெருங்குவதால், பொரி தயாரிக்கும் பணியில், உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை, தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை. அந்த நாளில், புத்தகங்கள், வாகனம், இயந்திரம், கருவி, ஆயுதங்களை வைத்து பூஜிக்கின்றனர். அந்த பூஜையில், பொரி, முக்கிய பூஜை பொருளாகக் கருதப்படுகிறது.எனவே, அதன் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பணியாளர் பற்றாக்குறை:இதுகுறித்து, ஈரோடு, சூளை பகுதி பொரி உற்பத்தியாளர் சுப்ரமணி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், பணியாளர் பற்றாக்குறையால், மூன்று இடங்களில் மட்டுமே, பெரிய அளவில், பொரி தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இதுதவிர, சிறிய அளவில், 50க்கும் மேற்பட்டோர் பொரி உற்பத்தி செய்து, மாவட்ட அளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக பொரி உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழகத்தில், ஆறு (180 நாள் பயிர்) மாதத்தில் விளையும் நெல் ரகங்களை பயன்படுத்தி, பொரியை உற்பத்தி செய்து, குறைந்த விலைக்கு விற்றோம்.தற்போது, தமிழகத்தில், ஆறு மாத காலப்பயிர் நடவு குறைந்து விட்டது. 90 முதல், 110 நாள் பயிர்களை நடவு செய்வதால், இந்த நெல் ரகங்களில் பொரி தயாரித்தால், கருகிவிடும் அல்லது உடைந்து, பக்குவம் வராது.
உடல் நலம்:அதனால், கர்நாடக மாநிலம் தாவணிக்கரை, மாண்டியா, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து, மொத்தமாக நெல் கொள்முதல் செய்து, பொரி தயாரிக்கிறோம்.இதை, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்கிறோம்.எட்டு கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரியை, 480 ரூபாய்க்கு விற்கிறோம். கடந்தாண்டை விட, இந்தாண்டு, மூட்டைக்கு, 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோவில், வீடு, கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர்.கையால் தயாரிக்கப்படும் பொரி வகை, உடல் நலத்திற்கு ஏற்றது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)