பதிவு செய்த நாள்
23 செப்2014
17:30
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 431 புள்ளிகளும், நிப்டி 129 புள்ளிகளும் சரிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம், இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலித்தது. இதன்காரணமாக முக்கிய நிறுவன பங்குகள் சரிந்தன, மேலும் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவு விற்றதாலும் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 431.05 புள்ளிகள் சரிந்து, 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்று 26,775.69-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 128.75 புள்ளிகள் சரிந்து 8100 புள்ளிகளுக்கு கீழ் சென்று 8,008.10-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி, என்டிபிசி., இந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட ஒரு சில பங்குகளை தவிர, மற்ற நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டல், டாடா பவர் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இவைகள் தவிர்த்து டிசிஎஸ்., சன்பார்மா, எஸ்பிஐ., கோல் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எல்அண்ட்டி, இன்போசிஸ், ஐசிஐசிஐ., ஓஎன்ஜிசி., போன்ற பங்குகளும் சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|