பதிவு செய்த நாள்
28 செப்2014
01:03
மும்பை:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 1.7 சதவீதமாக குறையும் எனவும், ஆனால், இது, வரும் 2015–16ம் நிதியாண்டில், 2.3 சதவீதமாக உயரும் எனவும், பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், பொருட்கள் மற்றும் சேவைகள் இறக்குமதி அதிகமாக உள்ளது.இந்நிலையில், தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், வரும் 2015–16ம் நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.3 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, நாட்டின் எட்டு மாத இறக்குமதி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான, அன்னியச் செலாவணி கையிருப்பு, ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.இதே நிலை, நீடிக்க வேண்டும் எனில், ரிசர்வ் வங்கி கையிருப்பை, வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 37,300 கோடி டாலராக அதிகரிக்க வேண்டியது அவசியம் என, பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|