பதிவு செய்த நாள்
29 செப்2014
23:59
காந்திகிராமம்: கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், ‘மெமரி கார்டின்’ பதிவு திறனை அதிகரிக்க காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர், மொபைல், ‘பென் டிரைவ்’ போன்றவற்றில் தகவல்களை சேமித்து வைக்க, ‘மெமரி கார்டு’ பயன்படுகிறது. தற்போது, ‘மெமரி கார்டின்’ பதிவு திறனை அதிகரிக்கும் முயற்சி உலக அளவில் நடந்து வருகிறது. இதற்கிடையே, பதிவு திறனை ‘நானோ’ தொழில்நுட்பம் மூலம் அதிகரிக்க காந்தி கிராம பல்கலை இயற்பியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) காந்தி கிராம பல்கலைக்கு, 11 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.இதுகுறித்து, இயற்பியல் துறை தலைவர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘மெமரி கார்டில்’ உள்ள குறைகாந்த மின் கடத்தியில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு திறனை அதிகரிக்கலாம். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் கம்ப்யூட்டர், மொபைல், ‘பென் டிரைவ்’ ஆகியவற்றின் வடிவமைப்பை சுருக்க முடியும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|