பதிவு செய்த நாள்
30 செப்2014
00:03
மும்பை: பிரதமர் மக்கள் நிதி திட்டம் எனப்படும் ‘ஜன் தன்’ திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, 5 கோடியை தாண்டியுள்ளது என, மத்திய நிதி சேவைகள் செயலர் ஜி.எஸ். சாந்து தெரிவித்தார்.ஏழைகளுக்கும் வங்கி சேவை கிடைக்கும் வகையில், ஜன் தன் திட்டத்தை, கடந்த ஆக., 28ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.அன்றைய தினத்தில் மட்டும், 1.5 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டன. மத்திய அரசு, அடுத்தாண்டு குடியரசு தினத்திற்குள் (ஜன., 26ம் தேதி–2015), 7.5 கோடி வங்கி கணக்குகள் துவக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், செப்., 25ம் தேதி வரையில், ஜன் தன் திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில், துவக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, 5.10 கோடியை (மொத்த இலக்கில், 70 சதவீதம்) எட்டியுள்ளது. இதன் மூலம், 3,600 கோடி ரூபாய் டிபாசிட் தொகை திரட்டப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை மூலம், வங்கி கணக்கு துவங்குவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது எனவும், அதன் மூலம் போலிகளை தவிர்க்கலாம் எனவும், சாந்து மேலும் கூறினார்.ஜன் தன் திட்டத்தில் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு, 5,000 ரூபாய் மிகைப்பற்று (ஓவர் டிராப்ட்) வசதியுடன், 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு மற்றும் ரூபே டெபிட் கார்டும் கிடைக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|