பதிவு செய்த நாள்
30 செப்2014
00:07
புதுடில்லி: கரீப் பயிர் விதைப்பு பணிகள், சூடுபிடித்ததையடுத்து, மொத்த சாகுபடி பரப்பு, 10 கோடி ஹெக்டேரை தாண்டியுள்ளது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இருப்பினும், கடந்தாண்டு கரீப் பருவத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்தே காணப்படுகிறது.இதன்படி, கடந்தாண்டு கரீப் பருவத்தில், 10.44 கோடி ஹெக்டேராக இருந்த சாகுபடி பரப்பு, நடப்பு கரீப் பருவத்தில், 10.19 கோடி ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.மத்திய வேளாண் அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, நெல் சாகுபடி பரப்பு, கணக்கீட்டு காலத்தில், 3.74 கோடி ஹெக்டேரிலிருந்து, 3.75 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
இதே போன்று, பருத்தி பயிரிடும் பரப்பும், 1.14 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.26 கோடி ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், செப்டம்பர் 26ம் தேதி நிலவரப்படி, இதர கரீப் பருவ பயிர்கள் சாகுபடி பரப்பு, கடந்தாண்டை காட்டிலும் குறைந்துள்ளது.முக்கிய உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் சாகுபடி பரப்பு முறையே, 1.82 கோடி ஹெக்டேர் மற்றும் 1.01 கோடி ஹெக்டேராக உள்ளன.இவை தவிர, எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் சணல் – மெஸ்தா சாகுபடி பரப்பு முறையே, 1.77 கோடி ஹெக்டேர், 48.70 லட்சம் ஹெக்டேர் மற்றும் 81.50 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் உள்ளன.மத்திய அரசு, நடப்பாண்டு கரீப் பருவத்தில், 9.40 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|