பதிவு செய்த நாள்
30 செப்2014
00:08
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, சரிவுடன் முடிவடைந்தது.ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையை கருத்தில் கொண்டு, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.11 சதவீதம் மற்றும் 0.12 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், உலோக துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 1.11 சதவீதம் சரிவை கண்டது.
இதையடுத்து, நுகர் பொருட்கள் (–0.92 சதவீதம்), வங்கி (–0.91 சதவீதம்) ஆகியவை உள்ளன.அதேசமயம், மருந்து துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 2.21 சதவீதம் ஏற்றம் கண்டது.இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் (1.84 சதவீதம்), நுகர்வோர் சாதனங்கள் (1.79 சதவீதம்) துறைகளின் குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 29.21 புள்ளிகள் சரிவடைந்து, 26,597.11 புள்ளிகளில் நிறைவடைந்தது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன் பார்மா, டி.சி.எஸ்., கெயில் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 9.95 புள்ளிகள் குறைந்து, 7,958.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|