பதிவு செய்த நாள்
30 செப்2014
23:59
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், முக்கிய கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், மருந்து, நுகர் பொருட்கள், எண்ணெய் – எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.இதன் காரணமாக, நேற்று முன்தினம் சரிவை கண்ட பங்கு வர்த்தகம், நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 33.40 புள்ளிகள் அதிகரித்து, 26,630.51 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 26,851.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 26,481.31 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன் பார்மா, எச்.டீ.எப்.சி., பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், பெல், ஆக்சிஸ் பேங்க், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 5.90 புள்ளிகள் உயர்ந்து, 7,964.80 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|