ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.61.94ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது - ரூ.61.94 ... தங்கம் உயர்ந்து - வெள்ளி விலை குறைந்தது தங்கம் உயர்ந்து - வெள்ளி விலை குறைந்தது ...
பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: டீசல் விலை மோடி நாடு திரும்பியதும் அறிவிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
11:28

புதுடில்லி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 65 காசு நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலையிலும், 21 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.அதேநேரத்தில், டீசல் மீதான விலை கட்டுப்பாடு தொடர்ந்தது. இந்நிலையில் 2013 ஜன., 17முதல், டீசல் விலை ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டது.
தற்போது டீசலின் இறக்குமதி செலவுக்கும், சில்லரை விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு குறைந்து விட்டது. அதற்குப் பதிலாக, 1 ரூபாய் அளவுக்கு, விலை அதிகமாகவே டீசல் விற்கப்படுகிறது.இந்நிலை நீடித்தால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் டீசல் விற்பனை குறைந்து, தனியார் நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கலாம். அதைத் தவிர்க்க, டீசல் விலை, லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, பிரதமர் மோடி இன்று நாடு திரும்பியதும் வெளியிடப்படும்.
எனினும், நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 65 காசுகள் குறைக்கப்பட்டன. மானியம் வழங்கப்படாத, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில், 21 ரூபாய், நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. டீசல் விலை, கடைசியாக, 2009 ஜன., 29ல், லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)