பதிவு செய்த நாள்
01 அக்2014
23:40
புதுடில்லி: முக்கிய எட்டு துறைகள், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 5.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 4.7 சதவீதமாக இருந்தது என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், நிலக்கரி, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 13.4 சதவீதம், 10.3 சதவீதம் மற்றும் 12.6 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளன. உருக்கு உற்பத்தி, 9.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 8.1 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி முறையே, 4.9 சதவீதம், 8.3 சதவீதம் சரிவை கண்டுள்ளன.இவை தவிர, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளின் உற்பத்தியும் தலா, 4.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகள், 4.4 சதவீதம் அதிகரித்துள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4.2 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,) கணக்கிடுவதில், மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|