பதிவு செய்த நாள்
01 அக்2014
23:42
மும்பை, : நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் சுணக்கமாகவே இருந்தது.சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறை தவிர்த்து, ஏனைய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்கள் சரிவை கண்டன.குறிப்பாக, எண்ணெய் – எரிவாயு, நுகர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண், 1 சதவீதத்திற்கும் மேல் சரிவை கண்டன. தற்காலிக மதிப்பீட்டின்படி, நேற்றைய வர்த்தகத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், நிகர அளவில், 63,240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன. அதேசமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள், 156 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 62.52 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,567.99 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி, டாட்டா பவர், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், விப்ரோ, கோல் இந்தியா உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன. அதேசமயம், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றி காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 19.25 புள்ளிகள் குறைந்து, 7,945.55 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|