பதிவு செய்த நாள்
04 அக்2014
00:00
புதுடில்லி:அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியா வில் மூன்று நகரங்களில், வரும் 2015ம் ஆண்டிற்குள், 3 தரவு மையங்களை அமைக்க உள்ளது என, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) சத்யா நாடெல்லா தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்தாண்டில், இந்தியாவில், நிறுவனத்தின் கிளவுட் கம்யூட்டிங் (மேக கணினி) வர்த்தகம், 100 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சியடைந்து உள்ளது. இந்தியாவில், கிளவுட் வர்த்தக சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி டாலர் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உள்நாட்டு தரவு மையங்கள் வாயிலாகவே, மேற்கண்ட வர்த்தகத்தை மேற்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, வரும் 2015ம் ஆண்டிற்குள், மூன்று இடங்களில், மூன்று தரவு மையங்களை நிறுவனம், அமைக்க உள்ளது. இவ்வாறு, நாடெல்லா கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|