பதிவு செய்த நாள்
20 அக்2014
01:20
புதுடில்லி:வரும், 2015ம் ஆண்டில், இந்தியாவில், தகவல் தொழில்நுட்பங்களுக்காக செலவிடும் தொகை, 9.4 சதவீதம் அதிகரித்து, 4.40 லட்சம் கோடி ரூபாயாக (7,330 கோடி டாலர்) வளர்ச்சி காணும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம்தெரிவித்துள்ளது.
அதேசமயம், நடப்பாண்டில், இதற்கான செலவினம், 4.02 லட்சம் கோடி ரூபாயாக (6,710 கோடி டாலர்) இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்தியாவில், கிளவுட் கம்யூட்டிங் எனப்படும் மேகக் கணினி சேவை, மொபைல்போன் உள்ளிட்டவைகளுக்காக செலவிடும் தொகை, சிறப்பான அளவில் அதிகரித்துவருகிறது.இதன் காரணமாக, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், வரும், 2016ம் ஆண்டிற்குள், இந்தியா மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பசந்தையாக உருவெடுக்கும் எனவும், 2018ம் ஆண்டிற்குள், இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச தகவல் தொழில்நுட்ப சேவைகள் சந்தை, 1 சதவீதம் வளர்ச்சி காணும் நிலையில், இந்தி யாவில் இதன் வளர்ச்சி, 10 சதவீதமாக இருக்கும்.குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் மென்பொருள் துறைகளின் வளர்ச்சி முறையே, 10.5 சதவீதம் மற்றும் 9.6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் சோன்டர்கார்டு தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|