பதிவு செய்த நாள்
20 அக்2014
01:22
புதுடில்லி:நடப்பாண்டு அக்., 3ம் தேதியுடன் முடிவடைந்த, 15 நாட்களில், வங்கிகள் திரட்டிய டிபாசிட், 13.05 சதவீதம் வளர்ச்சி கண்டு, 82.89 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 73.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 11 சதவீதம் உயர்ந்து, 56.50 லட்சம் கோடியிலிருந்து, 62.69 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய மொத்த டிபாசிட்டில், டிமாண்ட் டிபாசிட், 15.83 சதவீதம் அதிகரித்து, 6.75 லட்சம் கோடியிலிருந்து, 7.82 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.மேலும், குறித்த கால டிபாசிட், 12.77 சதவீதம் உயர்ந்து, 66.57 லட்சம் கோடியிலிருந்து, 75.07 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடன் வழங்கும் நடவடிக்கைகள் பெரிய அளவில் சூடுபிடிக்காததை அடுத்து, வங்கிகள், கடந்த சில மாதங்களாகவே, பல்வேறு டிபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|