பதிவு செய்த நாள்
20 அக்2014
01:23
புதுடில்லி:நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜன.,–செப்.,), நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, 1.30 லட்சம் கோடி ரூபாயை (2,170 கோடி டாலர்) எட்டியுள்ளது என, மெர்ஜர் மார்க்கெட் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 1,770 கோடி டாலராக இருந்தது. கணக்கீட்டு காலத்தில், மருந்து, உயிரி தொழில்நுட்ப துறைகளில் மட்டும், 510 கோடி டாலர் அளவிற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது, 23.4 சதவீத சந்தைபங்களிப்பாகும்.
ஏப்., – ஜூன் காலாண்டில், இணைத்தல் கையகப்படுத்தல் தொடர்பான ஒப்பந்தங்களின் மதிப்பு, 1,360 கோடி டாலராக இருந்தது. இது,மூன்றாவது காலாண்டில் (ஜூலை –செப்.,) 65.2 சதவீதம் சரிவடைந்து, 470 கோடி டாலராக குறைந்துள்ளது.கடந்தாண்டில், நிறுவனங்கள் இடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, 1.34 லட்சம் கோடி ரூபாயை (2,230 கோடி டாலர்) எட்டியிருந்தது. கடந்தாண்டுடன்ஒப்பிடும்போது, நடப்பாண்டில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை சிறப்பாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கணக்கீட்டு காலத்தில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் நிறுவனங்களிடையிலான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை, 42,960 கோடி டாலரை எட்டியுள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு, வெறும், 5 சதவீதம் மட்டுமே.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|