பதிவு செய்த நாள்
20 அக்2014
01:28
புதுடில்லி:நடப்பு 2014 - 15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,-செப்.,), 25 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1,019 கோடி ரூபாயை திரட்டியுள்ளன என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மதிப்பீடு:கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 16 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,050 கோடி ரூபாயை திரட்டியிருந்தன.மதிப்பீட்டு காலத்தில், சார்தா கிராப்கெம் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் அதிகபட்சமாக, 352 கோடி ரூபாயை திரட்டி கொண்டது.சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில், மொமய் அப்பேரல்ஸ் அதிகளவாக, 30 கோடியை திரட்டியுள்ளது. பங்குச் சந்தை விறுவிறுப்பிற்கேற்ப, புதிய பங்கு வெளியீடுகள் சந்தை வேகமெடுக்காமல் உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், குறிப்பாக, நான்காவது காலாண்டில், புதிய பங்கு வெளியீடுகள் சிறப்பான அளவில் இருக்கும் என, பிரைம் டேட்டாபேஸ் நிர்வாக இயக்குனர் பிரனவ் ஹால்டியா தெரிவித்தார். இதை எடுத்துக்காட்டும் வகையில், 'செபி' அனுமதியுடன் தற்போது, ஐந்து நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 1,240 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளன. மேலும், 11 நிறுவனங்கள், 4,707 கோடி ரூபாயை திரட்ட ஆயத்தமாகி வருகின்றன.நடப்பு நிதியாண்டில், பங்கு விற்பனை மூலம், 58,425 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பல்வேறு பிரச்னை கள் காரணமாக, பங்கு வெளியீடுதாமதமாகி வருகிறது. வாய்ப்பு:எனினும், ஓ.என்.ஜி.சி., கோல்இந்தியா, என்.எச்.பி.சி., - செயில், பி.எப்.சி., உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், மேற்கண்ட இலக்கு எட்டப்பட வாய்ப்புள்ளது என, பிரனவ் ஹால்டியா மேலும் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், ஆபர் பார் சேல் (ஓ.எப்.எஸ்.,) எனப்படும் கோரிக்கை அடிப்படையிலான பங்கு விற்பனை வழிமுறை மூலம், நிறுவனங்கள், 2,593 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|