பதிவு செய்த நாள்
20 அக்2014
01:32
புதுடில்லி:நடப்பு சந்தை பருவத்தில் (அக்., – செப்.,), இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 8.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.10 கோடி டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, பாசுமதி அதிகளவில் ஏற்றுமதியாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், சென்ற செப்டம்பருடன் நிறைவடைந்த சந்தை பருவத்தில், நாட்டின் மொத்த அரிசி ஏற்றுமதி, 7 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.01 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
இந்நிலையிலும், சர்வதேச சந்தை முன்னணி ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில்,இந்தியா தொடர்ந்து தன் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2014 – 15ம் பருவத்தில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 1.05 – 1.10 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பாசுமதியின் பங்களிப்பு, 40 – 45 லட்சம் டன்னாக இருக்கும் என, அக்ரிவாட்ச் ஆலோசனை அமைப்பு தெரிவித்து உள்ளது.பருவமழை பற்றாக்குறை காரணமாக, உள்நாட்டில், நெல் உற்பத்தி குறைவாகவே இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பாசுமதிஏற்றுமதி, 5 – 6 சதவீதம் வளர்ச்சி காணும் என்ற நிலைப்பாட்டால், சர்வதேச சந்தையில், இந்தியாவின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதி சிறப்பாகவே இருக்கும் என, அந்த அமைப்பு மேலும்தெரிவித்துள்ளது.ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் தேவை அதிகரிப்பு, உள்நாட்டில் உபரி கையிருப்பு அதிகமாக உள்ளது மற்றும் சகாய விலை ஆகியவை,இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கு முக்கிய காரணிகளாக அமையும் என,அக்ரிவாட்ச் தலைமை செயல் அதிகாரி வி.என்.சரோஜா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|