பதிவு செய்த நாள்
21 அக்2014
00:34
புதுடில்லி: ‘ஹூட்ஹூட்’ புயல் மற்றும் கனமழை காரணமாக, சில மாநிலங்களில் கரீப் பருவ சாகுபடி பாதிப்புக்குள்ளான நிலையிலும், நாட்டின் ஒட்டு மொத்த நெல் உற்பத்தி, 10 கோடி டன்னிற்கும் கீழ் சரிவடையாது என, மத்திய வேளாண் துறை செயலர் ஆசிஷ் பகுகுணா தெரிவித்தார்.கடந்த, 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை – ஜூன்), நாட்டின் நெல் உற்பத்தி, 10.65 கோடி டன்னை எட்டி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், நடப்பு பருவத்தில், 10.60 கோடி டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புயல், மழை உள்ளிட்ட தாக்கங்களால், கடந்த பருவத்தை காட்டிலும், நடப்பு பருவத்தில், நெல் உற்பத்தி நிச்சயம் குறையும். ஆனால், 10 கோடி டன்னிற்கும் கீழ் குறையாது என, பகுகுணா மேலும் கூறினார்.நாட்டின் ஒட்டு மொத்த நெல் உற்பத்தியில், கரீப் பருவத்தின் பங்களிப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இப்பருவத்தில், நெல் உற்பத்தி, 8.80 கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது, அறுவடைக்கு தயாராகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|