பதிவு செய்த நாள்
21 அக்2014
00:36
புதுடில்லி: கடந்த சில மாதங்களாக, தங்கம் இறக்குமதி உயர்ந்து, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதையடுத்து, தீபாவளிக்கு பின், அதன் இறக்குமதிக்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தீபாவளியை அடுத்து இதுகுறித்து விவாதிக்க, ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள், தங்கள் வெள்ளி பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி எகிறி வருவதையடுத்து, அதன் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்து மீண்டும் மறுஆய்வு செய்வது அவசியமாகிறது என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து, கடந்த சில மாதங்களாக, தங்கம் இறக்குமதி அதிகரித்து வருகிறது. ஜூன் வரையில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக, 10–15 டன் என்ற அளவில் இருந்த தங்கம் இறக்குமதி, ஜூலையில், 38.3 டன்னாகவும், ஆகஸ்டில், 63 டன்னாகவும், செப்டம்பரில், 92 டன்னாகவும் எகிறியுள்ளது. இது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பிற்கு மேலும் வழிகோலுவதாக அமைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|