பதிவு செய்த நாள்
21 அக்2014
00:38
புதுடில்லி: நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும், காப்பீட்டு மசோதா, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படும் என, நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:காப்பீட்டு மசோதாவை, தேர்வு செய்யப்பட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. இதை அடுத்து, காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை, 49 சதவீதமாக அதிகரிக்க வழி செய்யும் காப்பீட்டு மசோதா, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை உயர்த்தும் நிலையில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பொது மற்றும் ஆயுள் காப்பீட்டில், 24 தனியார் துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|