பதிவு செய்த நாள்
22 அக்2014
00:11
புதுடில்லி:இந்தியாவில், மின்னணு தயாரிப்புகளுக்கான தேவை பெருமளவில் வளர்ச்சி கண்டு வருவதையடுத்து, இத்துறையில், அடுத்த 2–3 ஆண்டுகளில், 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்படும் என, இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் கூட்டமைப்பு (ஐ.இ.எஸ்.ஏ.,) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மொபைல்போன், டேப்லெட், மற்றும் கேமரா போன்ற மின்னணு பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இவற்றின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதையடுத்து, அடுத்த 2–3 ஆண்டுகளில், மின்னணு துறையில், மாற்றியமைக்கப்பட்ட சிறப்பு ஊக்கத்தொகை தொகுப்பு திட்டத்தின் (எம்–எஸ்.ஐ.பி.எஸ்.,) கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான திட்டங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுவதாக ஐ.இ.எஸ்.ஏ., தலைவர் அசோக் சந்தக் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|