பதிவு செய்த நாள்
22 அக்2014
00:15
மும்பை:நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு கடன் வாயிலாக, 19,020 கோடி ரூபாயை (317 கோடி டாலர்) திரட்டி கொண்டுள்ளன.
இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 20,100 கோடி ரூபாயாக (335 கோடி டாலர்) அதிகரித்து காணப்பட்டது. ஆக, கணக்கீட்டு மாதத்தில், நிறுவனங்கள் திரட்டிய வெளிநாட்டு கடன், 5.3 சதவீதம் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
திரட்டப்பட்ட ஒட்டு மொத்த வெளிநாட்டு வர்த்தக கடனில், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் (அப்ரூவல் ரூட்), 6 நிறுவனங்கள் திரட்டிய கடன், 33 கோடி டாலராகவும், முன் அனுமதி தேவைப்படாத வழிமுறையின்(ஆட்டோமேட்டிக் ரூட்) கீழ், 79 நிறுவனங்கள் திரட்டிய கடன், 284 கோடி டாலராகவும் உள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 15 கோடி டாலரையும், ஏர் – இந்தியா, 10 கோடி டாலரையும், எஸ்ஸார் ஆயில், 7.50 கோடி டாலரையும் அப்ரூவல் வழிமுறையின் கீழ் திரட்டி கொண்டுள்ளன.
மேலும், ஆட்டோமேட்டிக் வழிமுறையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், 30 கோடி டாலரையும், நிசான் ஆட்டோமோடிவ், 25.46 கோடி டாலரையும், என்.டி.பி.சி., 25 கோடி டாலரையும் திரட்டி கொண்டுள்ளன என, புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|