பதிவு செய்த நாள்
22 அக்2014
16:32
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் முடிந்தன. எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தொடர்பான தொழிலில் மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை காரணமாக அதன்மீதான எதிர்பார்ப்பால் அந்த துறைகளை சார்ந்த பங்குகள் உயரத் தொடங்கின. மேலும் பண்டிகை காலம் என்பதாலும் முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பித்து, உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 211 புள்ளிகள் உயர்ந்து 26,787.23-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 68.15 புள்ளிகள் உயர்ந்து 7,995.90-ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 21 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி, எல் அண்ட் டி., ரிலையன்ஸ், விப்ரோ, இந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|