பதிவு செய்த நாள்
25 அக்2014
00:02
வதோரா:பொதுத் துறை வங்கிகளிகளில் காலியாக உள்ள, சி.எம்.டி. பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமருக்கு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.இ.ஏ.,) கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:சமுதாயத்தில், அனைத்து பிரிவு மக்களுக்கும், வங்கி சேவை சென்றடைவதை உறுதி செய்து வரும் நிலையில், பல பொதுத் துறை வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) பதவி காலியாக உள்ளது. குறிப்பாக, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க், சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் கமார்ஸ் ஆகிய வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவி, நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால்,பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுவதோடு, முறைகேடுகளுக்கும் வழிகோலுவதாக உள்ளது.எனவே, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளில் நிரப்பப்படாமல் உள்ள சி.எம்.டி., பதவிகளை, உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|