பதிவு செய்த நாள்
26 அக்2014
00:25
புதுடில்லி :ஜப்பானின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்தியாவில் விற்பனை செய்த, மைக்ரா மற்றும் நடுத்தர செடன் சன்னி வகையைச் சேர்ந்த, 9,000 கார்களை திரும்ப பெற்று, காற்றுப் பைகளில் உள்ள கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.கடந்த 2008 – 2012ம் ஆண்டுகளுக்கிடையில், தயார் செய்யப்பட்ட மேற்கண்ட கார்களில், விபத்தின் போது உயிர்காக்க உதவும் ஓட்டுனர் இருக்கை காற்று பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, நிசான் வினியோகஸ்தர்கள் மூலம், மேற்கண்ட கார்கள் திரும்ப பெறப்பட்டு, சரியான முறையில் தயாரிக்கப்பட்ட காற்றுப் பைகளை இலவசமாக மாற்றி தர இருப்பதாக, நிசான் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். நிசான், உலகளவில் விற்பனை செய்த, மார்ச்/மைக்ரா, சன்னி/அல்மேரா/வெர்சா, பேட்ரோல், கியூப் உள்ளிட்ட, 2.60 லட்சம் கார்களில், ஓட்டுனர் இருக்கை காற்று பைகளில் கோளாறு இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து, இந்நிறுவனம், சர்வதேச அளவில் கார்களை திரும்ப பெறும் நடவடிக்கையில் இறங்கியது. இதன் ஒரு பகுதியாகவே, தற்போது, இந்தியாவிலும், கோளாறை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|