பதிவு செய்த நாள்
26 அக்2014
00:32
மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 95 கோடி டாலர் (5,700 கோடி ரூபாய்) உயர்ந்து, 31,368 கோடி டாலராக (18.82 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்னியச் செலாவணி கையிருப்பில், அதிக பங்களிப்பை கொண்டுள்ள அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, கணக்கீட்டு வாரத்தில், 91 கோடி டாலர் அதிகரித்து, 28,780 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,001 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 2 கோடி டாலர் உயர்ந்து, 432 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|