பதிவு செய்த நாள்
26 அக்2014
00:34
புதுடில்லி: எளிதான தொழில் துவங்கும் மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு, உறுதிபூண்டு உள்ளது.இதையடுத்து, எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில், 134வது இடத்தில் உள்ள இந்தியாவை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50வது இடத்திற்கு முன்னேற்ற, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தீவிர நடவடிக்கைஇதற்கான நடவடிக்கைகளை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் ஏற்கனவே துவக்கி விட்டது.
குறிப்பாக, ஒரே நாளில் வர்த்தகத்தை பதிவு செய்தல், அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் ஒரே பதிவில் மேற்கொள்ளல் மற்றும் எண்ணற்ற வரிகளை குறைத்து வர்த்தகத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவை எளிதாக தொழில் துவங்கும் மையமாக மாற்ற, பல்வேறுபட்ட அரசு துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இலக்கை நிறைவேற்ற ஏதுவாக, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும் (டி.ஐ.பி.பி.,), விரைவாக சீரமைப்பு தேவைப்படக்கூடிய பிரிவுகளை கண்டறிவதில் முனைப்பாக களமிறங்கிஉள்ளது.நியூசிலாந்துஇதன் பயனாக, மத்திய அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள்,வர்த்தகம் செய்வதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்தி தர, எடுக்க வேண்டிய முக்கியமான, 46 நடவடிக்கைகளை, டி.ஐ.பி.பி., பட்டியலிட்டுள்ளது.
இதன்படி, கனடா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மேற்கொள்ளும் நடைமுறையை போன்று, வர்த்தகம் துவங்குவதற்கான பதிவு காலத்தை, ஒரு நாளாக குறைக்க, நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த கால அவகாசம், தற்போது, 27 நாட்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், வரி விதிப்புகள் எண்ணிக்கையை குறைப்பது, ஆன்–லைனில் வரி செலுத்துவது, சிக்கலான வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அமல்படுத்த தேவையான கால அவகாசத்தையும், டி.ஐ.பி.பி., அறிவித்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சராசரியாக, 3,000 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது.
வேலைவாய்ப்புதயாரிப்பு துறையை ஊக்குவிக்கவும், லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அதிகளவில் முதலீடு பெறுவது அவசியமான ஒன்று.உலக வங்கியின் அறிக்கைப்படி, தற்போது, எளிதாக தொழில் துவங்கக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இந்தியா மூன்று இடங்கள் பின்னடைவை கண்டு, 134வது இடத்தில் உள்ளது.மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா, 50வது இடத்திற்கு முன்னேறும் என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|