சென்செக்ஸ் 217 புள்ளிகள் ஏற்றம் - மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தொட்டதுசென்செக்ஸ் 217 புள்ளிகள் ஏற்றம் - மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளை தொட்டது ... நிப்டி 8100 புள்ளிகளை தாண்டியது நிப்டி 8100 புள்ளிகளை தாண்டியது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய நிறுவன முதலீட்டால்சென்செக்ஸ் 27,000 புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
23:46

மும்பை: சாதகமான சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், பங்கு வர்த்தகம் நேற்று மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பல முன்னணி நிறுவனங்களின், சிறப்பான செயல்பாடுகளை, காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிரொலித்தன. இதைத் தொடர்ந்து, அன்னிய நிதி நிறுவனங்கள், ஆர்வத்துடன் இந்திய பங்குகளை வாங்கி குவித்தன.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ முறையே, 0.81 சதவீதம் அதிகரித்து, 27 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக, 2.97 சதவீதம் அதிகரித்தது.
இதையடுத்து, உலோகம் (2.63 சதவீதம்), மோட்டார் வாகனம் (1.79 சதவீதம்), தகவல் தொழில் நுட்பம் (1.47 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.அதேசமயம், இந்திய வங்கிகள், சொத்து மதிப்பை அதிகரிக்கும் வகையில், வாராக் கடன் வசூலில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை.எனவே, இந்திய வங்கிகளின் தரக்குறியீடு, எதிர்மறை (நெகட்டிவ்) பட்டியலில் நீடிப்பதாக, சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்தது.
இதையடுத்து, வங்கி துறையைச் சேர்ந்த பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 217.35 புள்ளிகள் அதிகரித்து, 27,098.17 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, டாட்டா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 62.85 புள்ளிகள் உயர்ந்து, 8,090.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)