பதிவு செய்த நாள்
30 அக்2014
10:30
புதுடில்லி : சமையல், 'காஸ்' டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்பட்டதை அடுத்து, சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு, 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக, நாடு முழுவதும் டீலர்களை நியமித்துள்ளன. இந்த டீலர்கள், தங்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, டீலர்களுக்கான கமிஷன் தொகை, 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு, 40.71 ரூபாயிலிருந்து, 43.71 ரூபாயாக, கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. டீலர்களுக்கான கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால், அந்த விலை உயர்வு, வாடிக்கையாளர்களின் தலைகளில் சுமத்தப்படுவது வழக்கம். இதேபோல், இந்த கமிஷன் உயர்வு காரணமாக, 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் ஒன்றின் விலை, 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை, 401 ரூபாயில் இருந்து, 404 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, இம்மாதம், 23ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|