பதிவு செய்த நாள்
31 அக்2014
06:26
மும்பை:மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர்.இதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்தது.குறிப்பாக, கட்டுமான துறையில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 3.44 சதவீதம் அதிகரித்தது. மேலும், தகவல் தொழில்நுட்பம் (2.04 சதவீதம்) எண்ணெய், எரிவாயு (1.65 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 248.16 புள்ளிகள் அதிகரித்து, 27,346.33 புள்ளிகளில் நிலைகொண்டது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ், ஹிண்டால்கோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சேசா ஸ்டெர்லைட், சிப்லா, டாட்டா பவர் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 78.75 புள்ளிகள் உயர்ந்து, 8,169.20 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|