வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
27,500 புள்ளிகளுக்கு மேல் கடந்து சென்செக்ஸ் புதிய சாதனை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2014
09:55
மும்பை : சர்வதேச சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்டோபர் 31 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து 27,544 புள்ளிகளாகவும், நிப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 8226 புள்ளிகளாகவும் உள்ளன.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய சந்தைகள் அதிரடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் சந்தைகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன.
நிறுவன பங்குகளை பொறுத்தவரையில் எண்ணெய், எரிவாயு, சரக்கு போக்குவரத்து, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட துறைகளின் பங்குகளின் மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனங்களின் காலாண்டு லாபம் வெகுவாக உயர்ந்துள்ளதே பங்குச் சந்தைகளின் இந்த தொடர்ந்து ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது அக்டோபர் 31,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! அக்டோபர் 31,2014
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? அக்டோபர் 31,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது அக்டோபர் 31,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!