ஆபரண தங்கம் அதிரடி சரிவு ஒரு சவரன் விலை ரூ.19,704ஆபரண தங்கம் அதிரடி சரிவு ஒரு சவரன் விலை ரூ.19,704 ... எட்டு துறைகள் உற்பத்தி 1.9 சதவீதமாக குறைவு எட்டு துறைகள் உற்பத்தி 1.9 சதவீதமாக குறைவு ...
நிதி பற்றாக்குறை ரூ.4.38 லட்சம் கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2014
04:01

புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்., முதல் செப்., வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.38 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இது, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 82.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.அரசின் செலவினம்கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில், 76 சதவீதமாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், நிகர வரி வசூல், 3.23 லட்சம் கோடி ரூபாய் (முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில் 33.1சதவீதம்) என்ற அளவில் உள்ளது. அதேசமயம், மத்திய அரசின் மொத்த செலவினம், மதிப்பீட்டு காலத்தில், 8.62 லட்சம் கோடி ரூபாயாக (பட்ஜெட் இலக்கில் 48 சதவீதம்) உள்ளது.
இதில், திட்டமிட்ட செலவினம், 2.46 லட்சம் கோடியாகவும், திட்டமிடப்படா செலவினம், 6.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன.கணக்கீட்டு ஆறு மாத காலத்தில், வருவாய் வசூல், 4.17 லட்சம் கோடி ரூபாய் (பட்ஜெட் மதிப்பீட்டில் 35.1 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை, 4.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.இது, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
நடப்பு முழு நிதியாண்டில், இதை, 4.1 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் வரி வசூல் குறைந்துள்ள நிலையில், நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை, நேற்று முன்தினம் அறிவித்தது.இதில், திட்டமிடப்படா செலவினத்தை, 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட, மத்திய அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு சிக்கன வழிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.நிலுவை வரிவரும் 2016 – 17ல், நிதி பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் என்ற அளவில் குறைப்பதை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.அதிகளவில் வரி திரும்ப கொடுக்கப்பட்டதன் காரணமாகவே, நிதி பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், நிலுவையில், 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)