பதிவு செய்த நாள்
06 நவ2014
00:00
திண்டுக்கல்: திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் பெல்லாரி வெங்காயத்தில், சிதைவு ஏற்பட்டுள்ளதால், தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு நாள்தோறும், 18 லாரிகளில், 270 டன் பெல்லாரி வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு, அனுப்பிய பின், தரமான வெங்காயம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.தொடர் மழையினால் பெல்லாரி வெங்காயம் அழுகியதோடு, மேல் பகுதியில் சிதைவு ஏற்பட்டு காணப்படுகிறது.இதனால், தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்காக அனுப்பப்படும் பெல்லாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வெங்காய தரகு மண்டி செயலர் தமிழ்செல்வன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இருப்பு வைக்கப் பட்டிருந்த வெங்காயம் மற்றும் அறுவடை செய்யப்படும் பெல்லாரி வெங்காயங்களில் அழுகல் அதிகரித்து வருகிறது.உள்ளூர் தேவைக்காக விற்கப்படும் பெல்லாரி, கிலோ 13 ரூபாயிலிருந்து, 22 ரூபாய் வரை விற்பனை யாகிறது. தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, கூடுதலாக 3 ரூபாய் லாபம் கிடைக்கும். இருப்பு வைக்க முடியாத அளவிற்கு பெல்லாரி உடனுக்குடன் விற்கப்பட்டு விடும்.தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதால், வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அழுகல் காரணமாக பெல்லாரி வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|