பதிவு செய்த நாள்
13 நவ2014
00:22
புதுடில்லி: யூரியா விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என, உரத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உள்நாட்டில், தேவையை ஈடுசெய்யும் அளவிற்கு, யூரியா உற்பத்தி இல்லாததால், இறக்குமதி வாயிலாகவே தேவை பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. இறக்குமதியை அதிகம் சார்ந்திருப்பதை கட்டுப்படுத்தும் வகையில், உள்நாட்டில், யூரியா உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யூரியா விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில், யூரியா விலை, ஒரே ஒரு முறை மட்டுமே, டன்னுக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.மூடப்பட்ட பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, இந்துஸ்தான் பெர்டிலைசர் அண்டு கெமிக்கல் லிமிடெட் உள்ளிட்ட, ஐந்து தொழிற்சாலைகளை புதுப்பிக்க, உர அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|