பதிவு செய்த நாள்
13 நவ2014
00:33
தொடர்மழையால் ஏற்பட்ட, சளி, இருமல் காரணமாக, வாழைப்பழ நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வாழைத்தார் விலை, வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி கண்டு உள்ளது.
இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.அறுவடை செய்யும் வாழைத்தார்கள், ப.வேலுாரில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் விடப்படுகின்றன.
அவற்றை, கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராயக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், போட்டி போட்டு ஏலம் எடுத்து, விற்பனைக்காக, வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.கடந்த வாரம், 500க்கு விற்பனையான ஒரு பூவன் வாழைத்தார், நேற்று, 10 – 130 ரூபாயாக கடும் வீழ்ச்சி கண்டது.
மேலும், 400க்கு ஏலம் போன ரஸ்தாளி, 180க்கும், 300க்கு விற்பனை செய்யப்பட்ட, கற்பூரவள்ளி, 100க்கும், எட்டு ரூபாய்க்கு விற்பனையான, ஒரு மொந்தன் வாழைக்காய், மூன்று ரூபாய்க்கும் ஏலம் போனது.இதையடுத்து, வாழை பயிரிட்ட விவசாயிகள், உற்பத்தி செலவை கூட ஈடுகட்ட முடியாத நிலைக்கு ஆளாகி, பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|