பதிவு செய்த நாள்
13 நவ2014
00:41
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 5.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி வரி:பொருளாதார நடவடிக்கைகள் விறுவிறுப்படைவதை பிரதிபலிக்கும், உற்பத்தி வரி வசூல், மதிப்பீட்டு காலத்தில், 1.2 சதவீதம் சரிவடைந்து, 88,330 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரையில், மறைமுக வரி வசூல், பட்ஜெட் இலக்கில், 45.7 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசு, நடப்பு முழு நிதியாண்டில், மறைமுக வரிகள் மூலம், 6.24 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, கடந்த 2013 – 14ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 20.28 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு ஏழு மாத காலத்தில், சேவை வரி வசூல், 10.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 90,673 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதற்கான பட்ஜெட் இலக்கில், 42 சதவீதமாகும்.
இதே போன்று, சுங்க வரி வசூலும், 7.5 சதவீதம் அதிகரித்து, 1.06 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, பட்ஜெட் இலக்கில், 52.6 சதவீதமாகும். கடந்த இரண்டு நிதியாண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5.4 – 5.9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 2.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் மிகவும் சுணக்கம் கண்டிருந்தது.
புகையிலை பொருட்கள்:மத்திய பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிகரெட் தயாரிப்புகளுக்கான உற்பத்தி வரியை, 11–72 சதவீதம் வரை உயர்த்தினார்.இதே போன்று, பான்மசாலா தயாரிப்புகளுக்கான உற்பத்தி வரி, 12 சதவீதத்திலிருந்து, 16 சதவீதமாகவும், குட்கா, மெல்லும் புகையிலைக்கான உற்பத்தி வரி, 60 சதவீதத்திலிருந்து, 70 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டன.
அதேசமயம், வீட்டு வசதி, மோட்டார் வாகனம் உள்ளிட்ட துறைகளை ஊக்குவிக்கும் வகையில், வரி விலக்கு உட்பட பல சலுகைகளையும், ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|