பதிவு செய்த நாள்
20 நவ2014
00:10
சேலம்: வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த பாசி பருப்பு, உளுந்தம் பருப்பின் வரத்து சரிவால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தமிழக பருப்பு மில்களுக்கு தேவையான பாசி பயிறு, உளுந்து, அவற்றில் இருந்து தயார் செய்யப்படும் பருப்பு, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தே விற்பனைக்கு வருகிறது.கடந்த அக்., வரை, தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுக்களான சென்னை, சேலம் லீபஜார், விருதுநகர் ஆகியவற்றுக்கு, வாரத்துக்கு, 100 லாரிகளில் பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்புகள் விற்பனைக்கு வந்து கொண்டு இருந்தன. தற்போது, இதன் வரத்து, 50 லாரிகளாக குறைந்துள்ளது. இதை சாதகமாக்கி கொண்ட வியாபாரிகள், கையிருப்பை அதிகரித்துள்ளதால், விலைஉயர்ந்துள்ளன.கடந்த அக்., 12ம் தேதி, பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது. நவ., 1ம் தேதி, குவிண்டாலுக்கு, மேலும், 1,000 ரூபாய் வரை, மீண்டும் அதிகரித்தது. இந்நிலையில், நேற்று குவிண்டாலுக்கு, மீண்டும் 600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பாசிப்பருப்பு விலை, குவிண்டாலுக்கு 2,200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.பாசிப் பருப்பின் விலையில் உயர்வு ஏற்பட்டதை அடுத்து, உளுந்தம் பருப்பின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று அதன் விலை, குவிண்டாலுக்கு, 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|