பதிவு செய்த நாள்
20 நவ2014
00:21
மும்பை: அன்னிய நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் பங்குகளை போட்டி போட்டு வாங்கியதை அடுத்து, காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில், சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், மதியத்திற்கு பின், பங்குச் சந்தை சுணக்கம் கண்டது. குறிப்பாக, உலோகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் விற்பனை செய்தனர்.இதையடுத்து, மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண், முறையே, 2.14 சதவீதம் மற்றும் 1.80 சதவீதம் சரிவை கண்டன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 130.44 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 28,032.85 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், கெயில், உள்ளிட்ட, 22 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், டாக்டர் ரெட்டீஸ், எச்.டீ.எப்.சி., உள்ளிட்ட, 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 43.60 புள்ளிகள் சரிவடைந்து, 8,382.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|